வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா … நண்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா (வேலவா)
வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு … அரோகரா!
சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா … ஆடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா … ஓடிவா
(உன்னை) சிந்தையிலே நினைப்பவரை நாடிவா ..
சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா
வேலவா… வெற்றிவேல் முருகனுக்கு …
அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு … அரோகரா!
முத்தே ரத்தினமே … முருகையா
முழுமதி முகத்தவனே … கந்தையா … கந்தையா
முத்தகனே வினை தீர்க்கும் வேலையா
வடி வேலையா … உன் கையில் வேலையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா
(வேலவா)
வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா … நண்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா .. வெற்றிவேல் முருகனுக்கு …
அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு … அரோகரா!
– சரணம் ஐயப்பா –