பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
(பிள்ளையார்…)
ஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
(பிள்ளையார்…)
அவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார்
(பிள்ளையார்…)
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையுமே நீக்கி வைக்கும் பிள்ளையார்
(பிள்ளையார்…)
வேலவனின் அண்ணனாம் வேள்விக்கெல்லாம் முதல்வனாம்
வேண்டும் வரங்கள் யாவையுமே தந்தருளும் பிள்ளையார்
(பிள்ளையார்…)
வன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
(பிள்ளையார்…)
மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்
(பிள்ளையார்…)
-சரணம்—