ஆண்டவன் வாழ்வது சபரி மலையிலே
அருள்வந்து சேர்வது சபரி மலையிலே
ஆணவம் அழிவது சபரி மலையிலே
அமைதி கிடைப்பது சபரி மலையிலே
ஐயப்பா சரணம் ஐயப்பா
பகவானே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் ஜயப்பா
தேவனாக வாழ்வது சபரி மலையிலே
தாசனாக வாழ்வது சபரி மலையிலே
தீராது நோய் தீரும் சபரி மலையிலே
பாவங்கள் போக்கிட நம் சபரி மலையிலே
ஐயப்பா சரணம் ஐயப்பா
பகவானே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
கவலைகள் போக்கிடும் கணபதி
சன்னிதானம்
கலியுக வரதன் தவம் செய்யும்
சன்னிதானம்
கண்களில் நீர் பெருக அங்கமெல்லாம்
உருக
வணங்கிடும் பக்தர்களை காத்திடும்
சன்னிதானம்
ஐயப்பா சரணம் ஐயப்பா
பகவானே சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
– சரணம் ஐயப்பா –